Show all

எதிரெதிர் நிலைப்பாடு உள்ள தமிழ் மற்றும் பிராமண இனத்தின் வாழ்க்கை முறைகள். ஹிந்து மதம். எது சரி? இடமாறு தோற்றப் பிழை வரிசையில்.

நூறுவிழுக்காடு எதிரெதிர் நிலைப்பாடு உள்ள தமிழினத்தையும், பிராமண இனத்தையும் ஒரே வாழ்க்கை முறையைக் கொண்டவர்களாகக் கருதி அவர்களுக்கு ஹிந்து என்கிற ஒரு மத அடையாளத்தை வழங்கியவர்கள் இந்தியாவை ஆண்டிருந்த பிரித்தானியர்கள். இன்றைக்கு இது இந்தியாவில் பேரளவினரால் கொண்டாடப்பட்டுவரும் இடமாறு தோற்றப்பிழை என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.

11,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5125.

இடமாறு தோற்றப் பிழை என்றால் என்ன? அளவுகோல் கொண்டு அளப்பதில், சரியாக அளக்காத போது ஏற்படும் பிழை. இன்றைக்கு குறுவினாவாகக் கேட்கப்படுகிற இந்தக்கேள்வி, ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆறாம் ஏழாம் வகுப்புகளில், இயல்அறிவு (சயின்ஸ்) பாடப்பிரிவில் இடமாறு தோற்றப் பிழை என்றால் என்ன? படம் வரைந்து விளக்குக என்று பெரிய கேள்வியாக இருந்தது.

இன்றைக்கு எண்ணிம முறைக் கருவிகள், இடமாறு தோற்றப்பிழை இல்லாமல் துல்லியமாக அளவைக் காட்டுகிறது. இடமாறு தோற்றப் பிழை என்பது அளவுகோலில் அளக்கும் போது, அளவுக் கோட்டை நேர் செங்குத்தாகப் பார்க்காமல், இடமிருந்தோ, வலமிருந்தோ, மேலிருந்தோ, கீழிருந்தோ பார்க்கும் போது கிடைக்கும் தவறான அளவாகும். 

இந்த இடமாறு தோற்றப் பிழை தவறை வாழ்க்கையில் பலஇடங்களில் நாம் அடிக்கடி முன்னெடுத்துச் செல்கிறோம். 

முதலாவது பிழை: ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற சயின்சுக்கு நேரான தமிழ்ச் சொல்லை நிறுவுவதில் முன்னெடுக்கும் தவறாகும். காங்கிரசார் ஆட்சியின் போது தமிழ்வழிக் கல்வியில் சயின்ஸ் என்பதை விண்+ ஞானம் என்றவாறு விஞ்ஞானம் என்று வழங்கினார்கள். தற்போது நாம் சயின்ஸ் என்பதை அறிவியல் என்பதாக வழக்கில் கொண்டிருக்கிறோம். இது பிழை என்று விளக்கியிருந்தேன்.

இரண்டாவது பிழை: நூறுவிழுக்காடு எதிரெதிர் நிலைப்பாடு உள்ள தமிழினத்தையும், பிராமண இனத்தையும் ஒரே வாழ்க்கை முறையைக் கொண்டவர்களாகக் கருதி அவர்களுக்கு ஹிந்து என்கிற ஒரு மத அடையாளத்தை வழங்கியவர்கள் இந்தியாவை ஆண்டிருந்த பிரித்தானியர்கள். இன்றைக்கு இது இந்தியாவில் பேரளவினரால் கொண்டாடப்பட்டுவரும் இரண்டாவது இடமாறு தோற்றப்பிழை என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

இந்தியாவில் வாழும் இரண்டு அடிப்படை பேரினங்களில், ஒன்று தமிழினம், இரண்டு பிராமண இனம். இந்த இரண்டு இனங்களுக்குமே மதம் கிடையாது.

பிராமணர்கள் இமயமலைக் கணவாய்கள் வழியாக நாவலந்தேய இந்தியா வந்தபோது அவர்கள் தங்களுக்கென்று எந்த அடையாளமும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் கொண்டிருந்தது முந்தைபாஷ்து பேச்சு மொழியும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையும் மட்டுமே.

பிராமணர்கள், காமசூத்திரம், கொக்கோகம் என்று பாலியல் பாவணைகளைக் கொண்டாடும் பாலியல் கல்வியை விரும்புகிறவர்களாக வளர்ந்தார்கள்.

தமிழர்கள் பாலியல் பிறழ்வுகளுக்குத் தீர்வாக களவு, கற்போடு தனிக்குடும்ப வாழ்க்கை முறையில், 'குறித்தஅகவை திருமணத்தை' முன்னெடுத்து, திருமணத்தை உலகிற்கு கொடையாக வழங்கியவர்கள்.

பிராமணர்கள் தங்கள் மொழி வளர்ச்சிக்கு- வரலாறு நெடுகிலும் பற்பல மொழிகளில் இருந்து இடுகுறியாக பேரளவு சொற்களை எடுத்துக் கொண்டவர்கள். இன்று வடஇந்தியா முழுவதும் புழங்குகிற அத்தனை மொழிகளும், பிராகிருதம், சமஸ்கிருதம் என்று பல்வேறு வடஇந்திய மொழிகளைத் தாண்டி, அவர்களின் நடப்பு மொழியான ஹிந்தி அப்படியே முகமதியர்களின் உருது மொழயாக இருக்கிறது.

தமிழர்கள் எந்த அயல்மொழிக் கலப்பையும் ஏற்றுக்கொள்ளாது தங்கள் தமிழை தனித்துவமாக முன்னெடுத்து வருகிறவர்கள்.

தமிழர்களின் வாழ்க்கை முறையை பொருள் இலக்கணம் தெளிவாக விளக்குகிறது.

பிராமணர்களின் வாழ்க்கை முறையை வேதங்கள், இதிகாசங்கள், மனுஸ்மிருதி, காமசாஸ்திரம், கொக்கோகம் உள்ளிட்ட நூல்கள் விளக்க முயல்கின்றன.

கடவுள் ஒன்று
இறை நான்கு 
தெய்வங்கள் பல என்று நிறுவி, கடவுளையும் இறையையும் ஆற்றல் மூலங்களாகவும், தெய்வங்களை வழிபாட்டு மூலங்களாகவும் காரணத்தோடு கொண்டாடி வருகின்றவர்கள் தமிழர்கள்.

ஆற்றல் மூலங்களான கடவுள் குறித்தே, இறை குறித்தோ எந்தத் தெளிவும் இல்லாமல், தமிழர்தம் கடவுள்கூறு இறைக்கூறு தெய்வங்களை, அடிப்படை இல்லாமல் இடுகுறியாக பேரளவான புனைவுக் கற்பனைகளோடு கொண்டாடி வருகிறவர்கள் பிராமணர்கள்.

நூறுவிழுக்காடு எதிரெதிர் நிலைப்பாடு உள்ள தமிழினத்தையும், பிராமண இனத்தையும் ஒரே வாழ்க்கை முறையைக் கொண்டவர்களாகக் கருதி அவர்களுக்கு ஹிந்து என்கிற ஒரு மத அடையாளத்தை வழங்கியவர்கள் இந்தியாவை ஆண்டிருந்த பிரித்தானியர்கள். அந்த ஹிந்து மதத் தலைப்பு பேரளவான வட இந்தியர்களுக்கு பிடித்திருக்கிற காரணம் பற்;றி அதைக் கொண்டாடி வருகின்றனர்.

ஆனாலும் ஹிந்து மதத்திற்கு என்று ஒரு தலைமையையோ, வரையறையையோ இதுவரை யாரும் அமைத்துக் கொள்ள முயலவில்லை. அப்படியான ஒரு கட்டமைப்பு இல்லாத தலைப்பிற்கு, கிருஸ்தவர்களுக்கு பைபிள் முஸ்லிம்களுக்கு குரான் மாதிரி ஹிந்துகளுக்கு என்ன என்றும்,

கிறிஸ்தவ மதத்திற்கு சிலுவை, இஸ்லாமிய மதத்துக்கு பிறை மற்றும் நட்சத்திரம் என்று இருக்கும்போது, ஹிந்து மதத்திற்கு என்று முதன்மையான சின்னம் என்று எதை எடுத்துக் கொள்ளலாம்? ஏன்? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

தமிழர்கள் எந்த மதமும் கொண்டிருக்கவில்லை என்பதை பேரளவு தமிழர்கள் விரும்பி கொண்டாடி வருகின்றனர். வட இந்தியர்களும் மதமற்றவர்கள் தாம் என்கிற நிலையில், அதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்து ஹிந்து மதத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒரு கட்டமைப்பை நிறுவிக்கொண்டு இந்த வினாக்களுக்கெல்லாம் தங்கள் தெளிவை விடையாக்கி முற்றுப்புள்ளி வைக்க முயலவேண்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,750.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.