11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராம்தேவ், பாஜகவிற்கு ஆதரவாக கருத்துப் பரப்புதல் செய்தார். இதன் காரணமாக அவர் அரியானா மாநில தூதராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அரசு சார்பில், அமைச்சர் தகுதி வழங்கப்பட்டதுடன், சுழல் விளக்கு பொறுத்தப்பட்ட கார், பாதுகாப்பு காவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மதுரை வந்த பாபா ராம்தேவ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: நாட்டில் தற்போது அரசியல் சூழ்நிலை மிகவும் சிக்கலாக உள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என நம்மால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் போட்டி கடுமையாக இருக்கும். வரும் தேர்தலில் நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ போவதில்லை. நான் அரசியலில் கவனம் செலுத்தவில்லை. அரசியல் அல்லது மதம் சார்ந்த திட்டம் ஏதும் இல்லை. நாட்டையும் உலகையும் யோகா பயிற்சிகள் மூலம் தெய்வீகம், வளம், நிறைந்த இந்தியாவை உருவாக்குவதையே விரும்புகிறேன் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,013.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.