Show all

சாப்பாடு ரூபாய் நான்கு மட்டுமே! தனது பிறந்த நாளில் நடிகை ரோஜா தொடங்கிய உணவகம்

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது பிறந்தநாளை முன்னிட்டு மலிவு விலை உணவகம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் நடிகை ரோஜா. தமிழ்த்திரையில் முன்னணி கதைத்தலைவியாகத் திகழ்ந்தார் ரோஜா. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழி படங்களில் சுறுசுறுப்பாக வலம் வந்தார். 10 ஆண்டுகளில் 100 படங்கள் நடித்த நடிகை என்ற பெருமையையும் பெற்றார். 

அரசியலில் நுழைந்த ரோஜா, கடந்த முறை நகரி தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மாநில மகளிரணி தலைவியாகவும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடினார் ரோஜா. இதையொட்டி நகரி தொகுதியில் உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். 

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு ஒய்.எஸ் அண்ணா உணவகம் என்று பெயர் வைத்திருப்பதோடு, அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு ரூ.4 க்கு வழங்கப்படுகிறதாம். ரோஜாவின் இத்தகைய நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ரோஜாவை போல பிற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் இத்தகைய உணவகத்தை தொடங்குமாறு உத்தரவிட்டிருக்கிறாராம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,979.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.