Show all

கஜா புயலால் 5 ஏக்கர் தென்னந்தோப்பு சேதமடைந்ததால் உழவர் தற்கொலை

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சை மாவட்டம் சோழன்குடிகாட்டைச் சேர்ந்த உழவர் சுந்தர்ராசன.; இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் தென்னையின் மூலம் நிலையான பயன் அடைந்து வந்தார். 

தற்போது கஜா புயலால் 5 ஏக்கர் தென்னந்தோப்பு முழுமையாக சேதமடைந்த நிலையில், அரசும் எந்த விதமான நிவாரண முயற்சியையும் முன்னெடுக்காத நிலையில், இனி தமது வாழ்க்கை கேள்விக் குறியான நிலையில் வேறு வழியோதும் அறியாத நிலையில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,979.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.