Show all

பழமைவாய்ந்த கோயிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை.

குஜராத் மாநிலம் ஜுனகாத் அருகே கிரிநார் மலையடிவாரத்தில் உள்ள பழமைவாய்ந்த கோயிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜுனகாத் அருகே வாகேஸ்வரி சக்தி பீடம் என்ற கோயில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான கோயில்களும், ஆசிரமங்களும் உள்ளன. மேலும் இங்கு நூற்றுக்கணக்கான சாதுக்களும் தங்கி உள்ளனர். இந்தக் கோயிலுக்கு அந்தப் பகுதியை ஆண்ட நவாப் அரசர் ஏராளமான நகைகளைக் காணிக்கையாக அளித்து உள்ளார்.

புகழ்பெற்ற இந்தக் கோவிலில் வைக்கப்பட்டிருந்த பழமைவாய்ந்த ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கோயிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டு மர்ம மனிதர்களைத் தேடிவருகிறார்கள்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.