Show all

இந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் சிறந்த அமைப்பாம்! ஆர்எஸ்எஸ் தலைவரின் பெருமிதம்

30,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிகார் மாநிலத்தில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக., ஞாயிறன்று முசாபர்பூர் என்னும் நகரத்தில் உள்ள பள்ளியின் திடல் ஒன்றில் கூடியிருந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் நடுவே அவர் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இப்பொழுது நாட்டில் ஒரு போர் வந்தால் நாட்டுக்காகப் போராடும் ஒரு படையினை உருவாக்கிட இந்திய ராணுவத்திற்கு 6 முதல் 7 மாதங்கள் வரையாவது ஆகும். ஆனால் முறையாக பயிற்சி பெற்ற, ஒழுக்கம் நிரம்பிய ஆர்எஸ்எஸ் அமைப்பால் மூன்று நாட்களில் இது முடியும். அதுதான் நமது திறமை.

ஆர்எஸ்எஸ் ஒரு ராணுவம் அளவுக்கு ஒழுக்கம் நிரம்பியவர்கள். இது போல ஒரு நிலைமை ஏற்பட்டால், நமது அரசியல் சட்டம் அனுமதித்தால் நாட்டுக்காக களத்தில் நின்று போராட ஸ்வயம் சேவக்குகள் தயாராக இருக்கின்றனர். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

அவரின் இந்த பேச்சு இணையத்தை கொஞ்ச நாளைக்கு சூடாக்கப் போகிறது அவ்வளவுதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,696

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.