Show all

ஒரு வழியாக விசாரணைக்கு ஏற்றது உச்ச அறங்கூற்றுமன்றம்! பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனுவை

தனது தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் பதிகை செய்த மனுவை உச்ச அறங்கூற்றுமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நவம்பர் பத்தாம் நாள் 1990ம் ஆண்டு முதல் சூன் இருபத்தொன்றாம் நாள் 1991ம் ஆண்டு வரை இந்தியத் தலைமைஅமைச்சராக சந்திரசேகர் ஆண்ட காலத்தில் தான், மீண்டும் இந்திய ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நம்பிக்கையில் தீவிர கருத்துப் பரப்புதலை மேற்கொண்டது காங்கிரஸ. 

தேர்தல் கருத்துப் பரப்புதலுக்காக தமிழகத்திற்கு அழைக்கப் பட்டிருந்த ராஜீவ் காந்தி 1991 ஆண்டு மே 21-ந்தேதி திருப்பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

 இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் தூக்கு தண்டனை பெற்றனர். பின்னர் இவர்களது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பேரறிவாளன் மனு பதிகை செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

ராஜீவ்காந்தியை கொலை செய்ய தனு மனித வெடி குண்டாக மாறினார். அவர் பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட மின்கலம் நான் வாங்கி கொடுத்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது ராஜீவ்காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான இந்தியக் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்புக்குழு தயாரித்த விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இந்தியக் குற்றப் புலனாய்வுத்துறை பேரறிவாளன் மனுவுக்கு பதில் அளிக்கவும் உத்தரவிட்டது. கடந்த ஓரு ஆண்டாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல், நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில், அறங்கூற்றுவர் ரமணா தலைமையிலான அமர்வில், பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு இன்று காலையில் அணியமாகி வாதாடுகையில், ‘பேரறிவாளன் பதிகை செய்த வழக்கு கடந்த ஓர் ஆண்டாக விசாரிக்கப்படாமல் உள்ளது. விசாரணை பட்டியலில் அந்த வழக்கு முதலில் இடம்பெறும். பின்னர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடும் என்று வாதிட்ட நிலையில்,

இவ்வாறு ஓர் ஆண்டாக விசாரிக்கப்படாமல், நிலுவையில் இருக்கும் பேரறிவாளன் வழக்கு வருகிற நவம்பர் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சஅறங்கூற்றுமன்றப் பதிவுத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது.

எனவே அந்த வழக்கை பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது. திட்டமிட்டப்படி நவம்பர் 5-ந்தேதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அறங்கூற்றுவர் என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், நவம்பர் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,310.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.