Show all

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் இதுவரை குற்றம் நிரூபிக்கப்படாத தண்டனையாளர்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் பேரறிவாளன்- தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்ச அறங்கூற்று மன்றத்தில் புதிய மனு பதிகை செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘வெடிகுண்டில் வைக்கப்பட்ட மின்கலம் நான் வாங்கித் தந்ததாக என் மீது குற்றம் சுமத்தப் பட்டது. ஆனால் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், எனக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.’

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச அறங்கூற்று மன்றம் இதுகுறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு நடுவண் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,606

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.