Show all

இந்தியக் கடற்படையினரே, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடா! திருநாவுக்கரசர் கண்டனம்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பிச்சை என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு படகும் அதில் இருந்து மீனவர்களும் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்படுவதாக கரைக்குத் திரும்பிய மீனவர் இருதயம் என்பவர் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை நமது கடற்படையினர் ஹிந்தி பேசத் தெரியாதவனுக்கு மீன் பிடிக்க உரிமை இல்லை என்று தாக்கியதாக அதிர்ச்சியைப் பதிவு செய்தார்

இந்நிலையில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,606

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.