Show all

பிரியங்கா காந்தி காட்டம்! ப.சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்

உண்மையை பேசியதற்காக ப.சிதம்பரம் வேட்டையாடப்படுவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ப.சிதம்பரம் விவகாரம் சம்பந்தமாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மிகவும் தகுதியான, மரியாதைக்குரிய மாநிலங்களவை உறுப்பிரான ப.சிதம்பரம், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சராக பல ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்து வருகிறார். இந்த அரசின் தோல்விகளை அவர் தயக்கமில்லாமல் அம்பலப்படுத்தினார். ஆனால் இந்த உண்மை கோழைகளுக்கு சிரமமாக உள்ளது. அதனால் அவரை கோழைத்தனமாக வேட்டையாடுகின்றனர். ஆனால் இந்த நேரத்தில் நாங்கள் சிதம்பரத்திற்கு துணை நிற்போம், உண்மைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி எங்களுக்கு கவலையில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,251.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.