Show all

இளமைக்காலத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை பெருக்குவாராம் மோடி! இந்த நான்கரை ஆண்டுகளில் பிடுங்கிய ஆணிகள் எத்தனை: மக்கள்

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் வந்து விட்டது. புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடவும், பொய் வாக்குறுதிகளை அள்ளி விடவும் தொடங்கி விட்டார், நான்கரை ஆண்டுகளில் மக்களுக்காக ஒரு ஆணியும் பிடுங்காத நம்ம தலைமை அமைச்சர் மோடி.

இளமைக் காலத்தில் ஆண்டில் 5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பாராம் நம்ம தலைமை அமைச்சர் மோடி.

தனது இளமை காலம் குறித்து பீற்றியுள்ள மோடி, ஆண்டில்  5 நாட்கள் வனப்பகுதியில் தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

இளம் அகவையில் இமயமலைக்கு புனித பயணம் மேற்கொண்டதாக தெரிவித்த மோடி, சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் அங்கிருந்து திரும்பியவுடன் வாழ்நாள் முழுவதும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்ய முடிவு செய்ததாக கூறினார். (அவர் மக்கள் என்று சொல்வதற்கு பொருள் கார்ப்பரேட்டுகள்தானே)

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் 5 நாட்கள் வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருப்பேன் என்றும், அங்குள்ள சுத்தமான தண்ணீர், மக்கள் (இங்கே மக்கள் என்றால் மக்கள்தான் கார்ப்பரேட்டுகள் அல்ல) யாரும் இல்லாத அமைதியான சூழல் மனதுக்கு இதம் அளிப்பவையாக இருக்கும் என மோடி தெரிவித்தார்.

மேலும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தங்கியிருந்தபோது தேநீர், உணவு தயாரிப்பது, அலுவலகத்தை தூய்மைப்படுத்துவது போன்ற பணிகளை செய்ததாக மோடி நினைவு கூர்ந்தார்.

இந்த நான்கரை ஆண்டுகளில் எந்தெந்த நாட்டுக்குப் போனார்? என்னென்ன மாதிரியான சுகம் எல்லாம் அனுபவித்தார்? எவ்வளவு செலவு செய்தார்? என்னென்ன சாப்பிட்டார்? அதைச் சொல்லாமல் என்னவோ கதை செல்லிக் கொண்டிருக்கிறார் மோடி என்கிறார்கள் மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,042.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.