Show all

சிறுத்தைக்கு உணவானார்! மராட்டிய வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியைக் கடித்துக்கொன்றது சிறுத்தை

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மராட்டிய மாநிலம் ராம்தேகி காட்டில் ராகுல் வாக்கி போதி என்ற 35 அகவை புத்தத் துறவி மரத்தின் கீழ் அமர்ந்து  தியானம் செய்து கொண்டிருந்தார், காலை நேரமான  அப்போது சிறுத்தை அவர் மீது பாய்ந்து கடித்துக்கொன்றது.

இவருடன் தியானம் செய்த சீடர்கள் இருவர் தப்பியோடி இந்தத்  தகவலை காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், புத்தமதத்துறவியின் உடலை தேடினர். ஆனால், நிகழ்விடத்தில்  ராகுல் வாக்கி போதியின் உடல் இல்லை, சிறுத்தை அவரை கடித்துக் குதறி காட்டுக்குள் இழுத்துச் சென்றது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ராகுல் வாக்கி போதியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

சிறுத்தை புலி நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியை ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட இடமாக வனத்துறை அறிவித்துள்ளது. ஆபத்தான பகுதி என்ற அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி புத்தத் துறவிகள் இங்கு காலையில் தியானம் செய்ய வருவதாக புகார்கள் உள்ளன. 

நடப்பு மாதத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடைபெறுவது இது 5வது முறையாகும்.  825 கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதி மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,003.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.