29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு, ராக்கெட்ரி நம்பி எபெக்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் தான் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அந்தக் குற்றச்சாட்டால் தன்னுடைய வேலையை பறிகொடுத்து விட்டு, பல ஆண்டு காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்தார். அண்மையில் இந்த வழக்கிலிருந்து நம்பி நாராயணன் விடுதலை என்று தீர்ப்பானது. இவரது வாழ்க்கையை மையப்படுத்தி தான், நடிகர் மாதவன் இப்படத்தை இயக்கி அதில் நடித்து வருகிறார். அதில், நம்பி நாராயணன் என்ற கதாபாத்திரத்தில் மாதவன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இப்படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை, ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். அவரோடு இணைந்து தான் மாதவனும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,002.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.