Show all

விமானத்தில் பயணித்த 13பேர்கள் குறித்து தகவல் இல்லை! காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

காணாமல் போன ஏஎன் 32, இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் நேற்று ஒன்பதாவது நாளில் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது; பயணித்தவர் விவரம் ஏதும் இன்னும் அறியப்பட வில்லை.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி விமானத்தில் 13 பேர் இருந்தனர். விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து விசாரித்து வருவதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து வருவதாகவும், மேலும் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. செவ்வாயன்று ஒன்பதாவது நாளாக அந்த விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,181.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.