Show all

காவல்துறையிடம் புகார்! மணமகனின் பாதி தலை மழிக்கப் பட்டதை, தான் திருமணம் செய்யவிருந்த மணமகள் வீட்டார் வேலை என்பதாக

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூங்கும் போது தனது பாதி தலை மழிக்கப் பட்டதை, தான் திருமணம் செய்யவிருந்த மணமகள் வீட்டார் வேலை என்பதாக, காவல்துறையிடம் புகார் தெரிவித்தார் லக்னோவில் ஒரு இளைஞர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, பைக்கும், தங்கச் சங்கலியும் வேண்டும் என்று மணமகள் வீட்டாரிடம் மணமகன் கேட்டார். ஆனால் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால் அவற்றை வாங்கித் தர இயலாது என்று அவர்கள் கூறினர். அதனால் ஆத்திரமடைந்த மணமகன் பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்தார். இதனையடுத்து அவர் திருமணத்தையும் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மணப்பெண்ணின் பாட்டி கூறும்போது, திருமணம் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன், மணமகன் வரதட்சணை கேட்டார். குறுகிய காலமே இருந்ததால், எங்களால் செய்ய இயலாது என்று கூறினோம். அதனால் திருமணத்தை மணமகன் வீட்டார் நிறுத்தினர். அவரின் தலைக்கு யார் மொட்டை அடித்தது என்று தெரியவில்லை என்றார். 

மணமகனின் பாதி தலை மொட்டை அடிக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,949.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.