Show all

தெற்கில் வைரமுத்து, வடக்கில் நானாபடேகர். தும்பை விட்டு வாலை பிடிக்கும் 'எனக்குந்தான்' இயக்கத்தால் வெட்கத்தால் முகஞ்சிவக்கும் காளைகள்

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது இணையத்தில் தலைப்பாகிக் கொண்டிருக்கும் 'எனக்குந்தான்' இயக்கத்தின் தொடர்ச்சியாக ஹிந்தி திரையுலக நடிகர் நானா படகேர் மீது பாலியல் புகார் தெரிவித்தார் தனுசிரீ தத்தா.  தனுசிரீ பொய் சொல்வதாக நடிகை ராக்கி சாவந்த் விளாசினார். 

இந்நிலையில் தனுசிரீ தத்தா, நானா படேகர் மீது தான் பொய் புகார் தெரிவித்ததாக கூறிய ராக்கி சாவந்திடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ராக்கி பதில் தெரிவிக்காவிட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே கிடைக்கும் என்று தனுசிரீயின் வழக்கறிஞர் நிதின் முழங்குகிறார். 

இந்நிலையில், தனுசிரீ தத்தாவால் தான் ஹிந்தி திரையுலகில் 'எனக்குந்தான்' இயக்கம் தீவிரம் அடைந்துள்ளது. அவரின் தைரியத்தை பார்த்து தங்களுக்கும் துணிச்சல் வந்து பேசுவதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளார்கள். 

ஆனால் ராக்கியோ தனுசிரியை விளாசிக் கொண்டிருக்கிறார். நானாஅவர்கள் பற்றி தனுசிரீ பொய் புகார் தெரிவித்துள்ளார். தனுசிரீக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்துவிட்டு எழுந்தார் போன்று. நான் பெண்களை மதிப்பவள் ஆனால் இந்த தனுஸ்ரீ 10 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் இருந்து வந்து கண்டதையும் வாந்தி எடுக்கிறார். அவரிடம் பணம் இல்லாததால் நானா அவர்கள் மீது பழி சுமத்துகிறார் என்றெல்லாம்.
ஹிந்தி திரையுலகம் நானா அவர்களை வைத்து அல்லோகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. தெற்கில் வைரமுத்து, வடக்கில் நானாபடேகர். தும்பை விட்டு வாலை பிடிக்கும் 'எனக்குந்தான்' இயக்கத்தால் சீறிப்பாய வேண்டிய காளைகள் வெட்கத்தால் முகஞ்சிவக்கின்றன. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,949.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.