Show all

கொல்கத்தாவில் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முறையின்மை! முன்னாள் இணை இயக்குனர் கருத்து

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொல்கத்தா காவல்துறை ஆணையர் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்ய நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முயன்றது தொடர்பாக நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை முன்னாள் இணை இயக்குனர் சாந்தனு சென் கருத்து தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காள மாநிலத்தில் காவல்துறை ஆணையரை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்யச் சென்ற விவகாரம் தொடர்பான அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், மேற்கு வங்காள மாநில அரசு மற்றும் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை முகமைக்கு இடையில் தொடங்கியுள்ள இந்த போர் பற்றி நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை முன்னாள் இணை இயக்குனர் சாந்தனு சென் கருத்து தெரிவித்துள்ளார்.

நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை முகமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அரசியல்வாதிகள் விரும்பலாம். ஆனால், அதற்கு அதிகாரிகள் இடமளித்து விடக் கூடாது. 

தற்போது, மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருவதுபோன்ற விவகாரங்களுக்கான ஒரே தீர்வு என்னவென்றால், இதுதொடர்பாக நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு அறங்கூற்றுமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிகை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த வழக்கில் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை, அதிகாரிகள் சிறப்பு அறங்கூற்றுமன்றத்தை ஏன் அணுகவில்லை? என்பது எனக்கு புரியவில்லை என சாந்தனு சென் குறிப்பிட்டுள்ளார்.

    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,053.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.