Show all

பாஜக தேர்தல் வியூகம்! அரசியல் எதிரிகளை அந்நிய நாடுகளின் சதிகளோடு தொடர்பு படுத்தி வீழ்த்தும் முயற்சி

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, பாஜகவை வீழ்த்த நினைக்கும் அரசியல் கட்சிகளின்  செயல்பாடுகளை  அந்நிய நாடுகளின் சதிகளோடு தொடர்பு படுத்தி வீழ்த்தும் சோதனை முயற்சிகளுக்காக சிலரை பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறதாம் பாஜக.

மேற்கண்ட செய்தி வெளியாவதற்கு முன்பாகவே, கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சி.டி.ரவி, பாகிஸ்தான், சீனா, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் சேர்ந்து பிரதமர் மோடியை வரும் நாடாளுமன்றத்  தேர்தலில் தோற்கடிக்க சதிவலை பின்னியுள்ளன என்று குற்றச் சாட்டைப் பதிவு செய்துள்ளார். 

'நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளின் சிந்தனைகள் பாகிஸ்தானை ஒத்துள்ளன. இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடக்கூடாது என்று உலக அளவில் சதிவலை பின்னப்படுகிறது. ஏனெனில் மோடி மீண்டும் இந்தியத் தலைமை அமைச்சர் ஆனால், இந்தியா பெரிய சக்தியாக உருவெடுத்து விடும் என்று சில நாடுகள் அஞ்சுகின்றன. ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வென்று இந்தியாவை மேலும் வலுவாக்குவார் மோடி என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி புனிதமற்ற ஒரு கூட்டணி. காங்கிரஸ் செயலற்று விட்டது, பிராந்தியக் கட்சிகள் எப்போதும் அதிகாரப் பசியுடன் அலைகின்றன' என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,809. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.