Show all

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கும் ஆதார்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேசத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கும் ஆதார் கட்டாயமக்கப்பட்டு அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில கல்வித்துறை சார்பில் அங்குள்ள அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், இந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டுக்குள் ஆதார் எடுக்க வேண்டும் என்றும், பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு எழுத வரும் போது, பள்ளி அடையாள அட்டையோடு ஆதார் அட்டையும் சேர்த்து கொண்டு வரவேண்டும் என்றும் மாணவர், ஆதார் கொண்டுவராத பட்சத்தில், மாணவரின் பள்ளி முதல்வரே அதற்கு முழு பொறுப்பாகும் என்று பள்ளி முதல்வர் மூலம் மாணவருக்கு நெருக்கடி கொடுக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,607

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.