Show all

ஐ.எஸ். தீவிரவாதி 10 நிமிடம் மலையாள மொழியில் பேசும் பதிவொலியால் கேரளாவில் பரபரப்பு

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சூர் பூரம், கும்பமேளா விழாக்களின்போது உணவில் நஞ்சு வைத்து பெரும் அளவில் மக்களை கொன்று குவியுங்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதி விடுத்த பதிவொலி செய்தி மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளதாக கேரள காவல்துறை கூறுகிறது. இவர்களில் பலர் ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் ராணுவத்துக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு மரணத்தையும் தழுவியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வழிகளில் தாக்குதல்களை நடத்தி பெரும் எண்ணிக்கையில் மக்களை கொன்று குவிக்கும்படி ஐ.எஸ். தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக கேரள மாநிலம் காசர்கோடு நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் இணைந்த ஒருவர் 10 நிமிடம் மலையாள மொழியில் பேசும் பதிவொலி உரை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நமது மக்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணையவேண்டும். அப்படி இணைய விருப்பமில்லை என்றால் தீவிரவாத இயக்கத்தினருக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்திடவேண்டும்.

 

திருச்சூர் பூரம் விழா, கும்பமேளா போன்றவற்றில் தாக்குதல் நடத்தும்படி வேண்டுகிறோம். முதலில் இந்த விழா நடக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று உணவில் நஞ்சு வையுங்கள். அதை அங்கே வருபவர்களுக்கு சாப்பிட கொடுங்கள். இந்த தாக்குதலில் தன்னந்தனியாக ஈடுபடுங்கள்.

அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று அவர்கள் மீது ஏற்றி பெரும் எண்ணிக்கையில் கொன்று குவியுங்கள். இத்தகைய தாக்குதல் முறைகளைத்தான் உலகம் முழுவதும் இன்று நமது தீவிரவாத இயக்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் நமது போராளி ஒருவர் இசை நிகழ்ச்சியின்போது இப்படி தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தார்.

உங்களால் இதெல்லாம் முடியவில்லை என்றால் தொடர்வண்டி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுங்கள். அதுவும் முடியாவிட்டால் கத்தி முனையில் தாக்குதல் நடத்துங்கள். ராணுவத்தினர், நமது கதையை முடிக்க முயன்றாலும் அது நடக்காது. நமக்கு இதில் உயிர் இழப்புகள் ஏற்படலாம். ஆனால் நமது இயக்கம் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். உயிர் இருக்கும் வரை நாம் போராடுவோம்.

இவ்வாறு அந்த உரையில் பேசப்பட்டு உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,608

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.