Show all

இடிபாடுகளில் சிக்கிய 70 பேர், மீட்பு பணி தீவிரம்! கர்நாடகாவில் இடிந்து விழுந்த 6 மாடி கட்டிடம்

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகாவில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதன் இடிபாடுகளில் சுமார் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் தார்வாட் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது. இடிந்து விழுந்தது 6 மாடி கட்டிடம் என்று கூறப்படுகிறது. இந்தக் கட்டிடம் கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. அடுத்தகட்ட பணிகளுக்காக இன்று மீண்டும் கட்டுமானம் தொடங்கியது. அப்போதுதான் கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது. 6 மாடிகளும் இடிந்து மொத்தமாக தரைமட்டமானது. இடிபாடுகளுக்கு உள்ளே 70 பேர்கள் வரை சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கு தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மீட்கப்பட்ட சில பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடிபாடு எதனால் நிகழ்ந்தது என்று இன்னும் முழுமையான விவரம் வெளியாகவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.