Show all

சென்னை மருத்துவ மனைக்கு உடல் பரிசோதனைக்கு வந்த 123அகவை இளைஞர்!

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: 123 அகவை தாத்தா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்வதற்காக, இளைஞர் போல வந்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது. 

எண்ணெய் இல்லா உணவு நீண்ட ஆயுளைக் கொடுக்கும், என சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக வந்த 123 வயது முதியவர் தெரிவித்தார்.

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆசிரமம் நடத்தி வரும் சிவானந்த பாபா, தனது 123 அகவையிலும் ஆன்மிக சேவை, யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை மேற்கொண்ட இவர், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவானந்த பாபா, ஆன்மிகம் மற்றும் யோகா பயிற்சியை இலவசமாக பயிற்றுவிப்பதாகவும்,  அனைவரும் சாப்பிடும் சோறு, சப்பாத்தி போன்ற வழக்கமான உணவை எண்ணெய்யின்றி உட்கொள்வதே, தனது  நீண்ட ஆயுளின் ரகசியம் என தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,996.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.