Show all

ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் பல்டல் மலையடிவார முகாமில் இருந்து நேற்றைய அமர்நாத் யாத்திரைக் குழு புறப்பட்டுச் சென்றது. காஷ்மீரின் கன்டேர்பால் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, பின்னிரவு நேரத்தில் பயங்கர இடி, மின்னலுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.

இந்த பெருமழையால் 12 வயது சிறுவன் மற்றும் 13 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.9 பேர் காயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கபட்டுள்ளனர். 2 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழையின் தீவிரம் குறைந்தபின்னர் இன்று 1000-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மழையால் இறந்தவர்கள் அமர்நாத் கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் இல்லை என்றும், அடிவார முகாம் அருகில் வசித்து வந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.