Show all

ஆளும் மாநில விவசாயிகள் பற்றி பேச ராகுல் தயாரா

கர்நாடகா, அசாம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநில விவசாயிகளின் நிலை குறித்து பேச தயாரா என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் உள்ள சர்வதேச நகரத்தார் 2 நாள் வணிக மாநாடு இன்று தொடங்கியது. இதில் கலந்துக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மதுவிலக்கு முக்கிய பிரச்னையாக அமையும் என தெரிவித்தார்.

பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ள விவசாயிகள் நிலை குறித்து ஏன் பேசுவது இல்லை என்று கேள்வி எழுப்பினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.