Show all

ஆயுள் கைதிகளை மாநில அரசுகளே விடுதலை செய்யலாம் உச்ச நீதிமன்றம் விளக்கம்

சிபிஐ விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளை மாநில அரசுகளே விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் சிபிஐ விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் கைதிகளை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் என்று கூறியிருந்தால், மாநில அரசு விடுவிக்க முடியாது என்றும் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளையும் மாநில அரசு விடுவிக்கக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசு விடுவிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.

இந்த தடை, இன்றைய உத்தரவின் மூலம் விலக்கியுள்ளது. ராஜீவ் காந்தி வழக்கை சி பி ஐ விசாரித்ததால், இன்றைய தீர்ப்பு அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பொருந்தாது. இதனைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.