Show all

வடக்கு கேமெரூனில் தற்கொலைப்படை தாக்குதல் 13 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான கேமெரூனில் தீவிரவாதிகள் நடத்திய 2 தற்கொலைத் தாக்குல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் படுகாயமடைந்தனர்.முதல் தாக்குதல் வடக்கு கேமெரூனின் மரவ்வா மார்க்கெட் பகுதியில் நடந்தது. இரண்டாவது தாக்குதல் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மற்றொரு பகுதியில் நடந்தது.

தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அங்கிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பு மிக்க பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும், இதனால் பதற்றம் ஏற்பட்டதாகவும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலர் கூறினர். இத்தாக்குதலுக்கு இது வரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என கேமெரூன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.