Show all

எதிர்க்கட்சிகளை மிரட்டவும், மக்களைப் பீதிக்குள்ளாக்கவுமானது இந்த எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமான சோதனைகள்! ஸ்டாலின்

ஆளும் கட்சியினர் எவ்வளவு குறுக்கு வழிகளைக் கையாண்டாலும், நடுவண்-மாநில அரசுகளை அப்புறப்படுத்த மக்கள் உறுதியாக உள்ளனர். இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். எதிர்க்கட்சிகளை பீதியிலேயே வைத்திருக்கவே திட்டமிட்டு வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்கிறார் ஸ்டாலின் 
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், வேலூர் தேர்தல் ரத்து குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 
ஆளும் கட்சியினர் எவ்வளவு குறுக்கு வழிகளைக் கையாண்டாலும் நடுவண்-மாநில அரசுகளை அப்புறப்படுத்த மக்கள் உறுதியாக உள்ளனர். இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். எதிர்க்கட்சிகளை மிரட்டவும் மக்களைப் பீதிக்குள்ளாக்கவும் திட்டமிட்டு வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்றார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,125.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.