Show all

சென்னை சல்லிக்கட்டு கடற்கரையில் செயலலிதா நினைவிடத்திற்கு தடையில்லை! எதிரான வழக்கு தள்ளுபடி

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை சல்லிக்கட்டு கடற்கரையில் செயலலிதா நினைவிடம் கட்ட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது. எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள், சத்திய நாராயணா, ராஜமாணிக்கம் அமர்வு, தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் தலையிட முடியாது. எதிர்காலத்தில், மக்கள் நலன் கருதி அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். 

செயலலிதா மறைந்த காரணத்தினால் தானே சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார், அதனால் செயலலிதாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூறலாம் என்ற வாதத்தை, ஏற்க முடியாது என அறங்கூற்றுவர்கள் தங்களது உத்தரவில் கூறினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,041.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.