29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மலேசியாவில் ஆசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றனர். கோலாலம்பூர் விளையாட்டு அரங்கில் நெடுங்கம்பு, நடுக்கம்பு, சுருள்வாள், மான் கொம்பு, வாள் வீச்சு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. குழுவிற்கான போட்டியில் சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகத்தினர் மூன்றாமிடத்தையும், தனிநபர் பிரிவில் மாற்று திறனாளி வீரர் விமல் 4 தங்க பதக்கங்களையும் பெற்றார்கள். விருதுகளுடன் நேற்று சீர்காழி வந்தவர்களுக்கு புதிய பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகரின் முதன்மை வீதிகள் வழியாக அவர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,941.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.