Show all

முன்மொழிந்தோர் கையொப்பம் போலி என்று விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் பதிகை செய்த வேட்புமனு இன்று மதியம் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார்.

மேலும், தனக்கு முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனர் என்று குற்றம் சாட்டினார். மேலும் அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக ஒலிப்பதிவு ஒன்று வெளியிட்டார். அந்த ஒலிப்பதிவு தீயாகப் பரவி வந்த நிலையில், தற்போது விஷால் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

ஆனாலும் அண்மைச் செய்தியாக- விஷால் வேட்பு மனுவை முன்மொழிந்தோர் குறித்திருந்த சுமதி, தீபன் ஆகியோர் தாங்கள் விஷாலை முன்மொழிந்து; கையொப்பம் இடவில்லை என்று நேரடியாக தெரிவித்த நிலையில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,627

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.