Show all

விஷால் தம்பியும், தீபாவும் இன்னும் மழலையர் வகுப்பு முடிக்கவில்லை என்று கீச்சுவில் எச்.இராசா நையாண்டி

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் இடைத்தேர்தலில் விஷால், தீபாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து எச்.ராஜா கூறுகையில் அவர்கள் இருவரும் இன்னும் மழலையர் வகுப்பு முடிக்கவில்லை என்று கீச்சுவில் நையாண்டி செய்துள்ளார்.

இரா.கி.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதற்கான வேட்புமனுக்களை பதிகை செய்யும் நாள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது. நேற்று அந்த வேட்புமனுக்கள் மீது அதிகாரிகள் பரிசீலனை செய்தனர்.

இதில் படிவம் 26-ஐ நிரப்பாத காரணத்தால் தீபாவின் வேட்புமனுவும், முன்மொழிந்தவர்கள் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன.

இதற்காக விஷால் சாலையில் அமர்ந்து முழக்கப் போராட்டங்களைச் செய்தார். பின்னர் அவரது மனு ஏற்கப்பட்டு மீண்டும் காரணத்தை தெளிவு படுத்தி நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா- விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு. அரசியலில் அவர்கள் இன்னும் மழலையர் வகுப்புகள் முடிக்கவில்லை என்று தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,628

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.