Show all

காவல்துறை கைதுசெய்த அணில், சிறைவிடுப்பில் தப்பித்து ஓடியதாக சமூக வலைத்தளங்களில் பகிர்வு

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள சீ கிர்ட் என்ற இடத்தில், ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ்; சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அங்கு ஒரு பெரிய கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு அதில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டன.

இந்த விளக்குகளை அணில் ஒன்று தொடர்ந்து சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால பல விளக்குகள் எரியவில்லை. இதனையடுத்து, சீ கிரிட் காவலர்கள் அந்த அணிலைப் போராடி பிடித்தனர்.

ஆனாலும் அந்த அணில் காவலர்களிடம் இருந்து தப்பி ஓடி விட்டது. இந்த நிகழ்வை-

கைது செய்யப்பட்ட அணில் கைதான சில நிமிடங்களில் சிறைவிடுப்பில் தப்பித்து ஓடி விட்டதாக

காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக நையாண்டி செய்து அனைவரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,628

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.