Show all

மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள்

10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தில் பல்வேறு துறை சார்ந்த நபர்களை அக்கட்சியின் உயர்மட்டக்குழுவாக அறிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்று புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இதையடுத்து கட்சியின் உயர்மட்டக் குழுவாக எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மவுரியா, பத்திரிகையாளர் ராஜநாராயணன் உள்ளிட்டோரை அறிவித்துள்ளார். அக்கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேல் நியமனம் செய்யப்பட்டார்.

இதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வையாபுரி, பாடலாசிரியர் சிநேகன், நடிகர் பரணி ஆகியோரும், இயக்குநர் ராசி.அழகப்பன், சல்லிக்கட்டு பேரவையைச் சார்ந்த ராஜேஷ் உள்ளிட்டோர் மக்கள் நீதி மய்யத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,706 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.