Show all

குடும்ப அடையாள மிடுக்கு அட்டை பெறாதவர்களுக்கு அடுத்த மாதம் முதல் பொருட்கள் கிடையாதாம்

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 தமிழகம் முழுவதும் குடும்பப் பொருள்கள் பெறுவதற்கான குடும்ப அட்டைகள் மிடுக்கு அட்டைகளாக மாற்றித் தரப் பட்டு வருகின்றன.

இ-சேவை மையங்கள் மூலமாகவும் குடும்ப மிடுக்கு அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 60 விழுக்காடு பேருக்கு மட்டுமே இதுவரை மிடுக்கு அட்டைகள் வழங்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மிடுக்கு அட்டைகளில் நடிகையின் புகைப்படம், செருப்பு, ஆண் பெயருக்கு பெண் படம், பிள்ளையாருக்கு மிடுக்கு அட்டை என பல குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகள் காரணமாக இன்னும் 40 விடுக்காட்டு பேருக்கு மிடுக்கு அட்டைகள் வழங்கவில்லை.

தமிழகத்தில் இ சேவை மையங்கள் மூலமும், பொதுவிநியோகத்துறை மூலமும் அதிக பிழைகளோடு வழங்கப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் அட்டைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிடுக்குஅட்டை பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான குடும்ப அடையாள மிடுக்கு அட்டை பெற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் மிடுக்குஅட்டைகள் வழங்கும் பணிகளை இந்த மாதத்தோடு முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அடுத்த மாதம் முதலே குடும்ப அட்டை பொருள் விநியோகக் கடைகளில் மிடுக்கு அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே பொதுவிநியோக பொருட்கள் வழங்கவேண்டும்.

பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொருட்கள் இல்லை என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு பொதுவிநியோகத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

எனவே மிடுக்குஅட்டை பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான மிடுக்கு அட்டைகள் பெற்றுக் கொண்டால் மட்டுமே அடுத்த மாதம் முதல் பொருட்களை பெற முடியுமாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,630

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.