Show all

கூவம் குடிசை வாழ் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கிரீம்ஸ் சாலையில் குடிசை வாழ் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு கடந்த இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை கிரீம்ஸ் சாலைக்கு அருகில் இருக்கும் கூவம் ஒட்டிய பகுதியில் சிறிய குடிசைகளில் வசித்து வரும் இவர்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியேறும் படி பல முறை கூறி வந்தது.

அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கு செம்மண்சேரியில் வசிப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. அவர்களை இந்த மாதத்திற்குள் கூவம் கரையை காலி செய்ய சொல்லி இருந்தனர்.

இந்த நிலையில் செம்மண்சேரி பகுதிக்கு மாறுவதற்கு அந்த மக்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். மேலும் அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே ஏதாவது இருப்பிட வசதி உருவாக்கி தரவேண்டும் என்று கூறினார்.

இதை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து தற்போது மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். கிரீம்ஸ் சாலையில் மக்கள் செய்யும் போராட்டம் காரணமாக பெரிய அளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,612

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.