Show all

ஊடகத்திற்கான அறத்தைக் குழிதோண்டி புதைக்கும் இதழியலாளர்கள்! குமுறும் கிருஷ்ணப்பிரியா

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 ஊடக அறத்தை செய்திஇதழ்கள் குழிதோண்டி புதைப்பதாக கிருஷ்ணப்பிரியா சாடியிருக்கிறார்.

வருமான வரி சோதனையில் சிக்க வைக்கப் பட்ட போதும் கூட மனம் தளராத கிருஷ்ணப்பிரியா அதையும் ஒரு சாதகமான அம்சமாக பார்த்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தயக்கமே இல்லாமல் பதிலளித்தார். தற்போது தம்முடைய முகநூல் பக்கத்தில் கிருஷ்ணப்பிரியா பதிவிட்டுள்ளதாவது: ‘கேள்வி கேட்பேன் ‘கருத்துச் சுதந்திரம் என்ற தலைப்புகளில், ஊடக அறத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் சில இதழியலாளர்களிடம் நான் கட்டாயம், சில கேள்விக் கணைகளைத் தொடுக்க வேண்டும்; தொடுப்பேன்! இவ்வாறு கிருஷ்ணப்பிரியா பதிவிட்டுள்ளார்.

- தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,621

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.