Show all

மாற்றுச் சாவியை எடுக்கும் முயற்சியில் மாணவர் மரணம்! விபரீத சிந்தனை தந்த சோகம்.

சாவியை தொலைத்த இளைஞர் மாற்றுச் சாவியை எடுக்கலாம் என்ற யோசனையில் சாளரம் வழியாக வீட்டுக்குள் நுழைய முயன்ற போது தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: முகம்மது அப்ரிடி என்ற இளைஞர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார் .திருப்போரூர் காலவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தங்கி வந்த நிலையில் இவரது வீட்டின் சாவி தொலைத்து விட்டார்.
வீட்டிற்குள் தான் பத்திரப் படுத்தி வைத்திருந்து மாற்று சாவியை எடுத்துக் கொள்ளலாம் என்று சாளரம் வழியாக வீட்டுக்குள் நுழைய முடிவெடுத்து இடுப்பில் கயிறு கட்டி மடியில் இருந்து இறங்கி உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து 14 ஆவது மடியில் இருந்து கீழே விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,124.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.