Show all

கமல் மக்களை நேரடியாக சந்தித்ததை சீமான் பாராட்டினார்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119; பொது மக்கள் பிரச்சினை தொடர்பாக கீச்சுவில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்த நடிகர் கமல் நேற்று முதல் முறையாக களத்தில் குதித்தார்.

எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படும் இடத்தை அவர் பார்வையிட்டார். பின்னர் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

கமல், மக்கள் பணிக்காக நேரடியாக களத்தில் இறங்கியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கமலின், மக்கள் பணியினை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்களை நேரடியாக சந்திக்க கமல் முன்வந்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.