Show all

எச்.இராஜா பாணியிலேயே எச்இராஜாவைப் பகடியாடி, பாராட்டுபெற்று வருகிறார் சீமான்! நெல்லைக் கண்ணன் விடுதலை.

இன்று நெல்லை கண்ணன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீமான், “அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை. சிகிச்சை தோல்வி!” என்று ராஜாவை சூசகமாக பகடியாடியுள்ளார்.

27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகவினரின் தூண்டுதலால், தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் தமிழறிஞர் நெல்லை கண்ணன். இன்று அவருக்கு பிணையில் விடுதலை வழங்கப்பட்டுள்ளது. 

நெல்லைக் கண்ணன் கைதைக் கொண்டாட எச்.இராஜா பயன்படுத்திய ‘கிகிச்சை வெற்றி’ என்ற கீச்சைத் திருப்பிப் போட்டு, சிகிச்சை தோல்வி என்று நெல்லைக் கண்ணன் விடுதலையை கொண்டாடி இணையத்தைத் தீயாக்கி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சில நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழறிஞர் நெல்லை கண்ணனின் உரை ஒன்று சமூகவலைதளங்களில் தீயாகப் பரவியது.

அதில், நெல்லை கண்ணன் அமித்சா மற்றும் மோடிக்கு எதிராக உரையாற்றி வன்முறையைத் தூண்டுவது போல் பேசியதாக அவர் மீது பல மாவட்டங்களில் பாஜகவினர் அளித்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினர் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை எதிர்த்து நெல்லை கண்ணன் தொடர்ந்த வழக்கில் இன்று அவருக்குப் பிணையில் விடுதலை வழங்கியுள்ளது அறங்கூற்றுமன்றம். 

முன்னதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட வேண்டும் என்று ஆவேசமாக கீச்சு மூலம் கருத்துப்பரப்புதல் செய்து வந்தவர் எச்.இராஜா. கண்ணன் செய்துப்பட்டதைத் தொடர்ந்து, “சிகிச்சை வெற்றி” என்று கீச்சினார் இராஜா.

இன்று நெல்லை கண்ணன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீமான், “அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை. சிகிச்சை தோல்வி!” என்று ராஜாவை சூசகமாக பகடியாடியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,394.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.