Show all

பொங்கல் விழாவில் மூன்றாவது நாளான இன்று காணும் பொங்கல்! தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று தமிழகம் முழுக்க காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவில் மூன்றாவது நாளான இன்று மிகவும் கொண்டாட்டமான நிகழ்வாகும். பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீட்டில் இருந்து கொண்டாடிய மக்கள் வெளியே சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவது காணும் பொங்கலின் போதுதான். 

காணும் பொங்கலின் போது சில கிராமங்களில் மஞ்சள் தண்ணீர் தெளித்து விளையாடுவது, சில ஊர்களில் பல்வேறு போட்டிகள் நடத்தி திருவிழா போல கொண்டாட்டங்கள் நடப்பது வழக்கம். அதேபோல் சுற்றுலாத்தலங்களுக்கும் மக்கள் அதிகம் செல்வது வழக்கம். இதனால் தமிழகம் முழுக்க காணும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. 

இதனால் சென்னை சல்லிக்கட்டு கடற்கரையில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவக்குழு, குதிரைப்படை உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,035.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.