03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவழைத்து வச்சு செய்ய வேண்டும் என்று ஊடகங்களுக்கு தணியாத ஆசை போல. மக்களோ: அதெல்லாம் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்யா கதை பண்ணிட்டே படத்திலே நடிச்சிட்டு இருப்பாரு என்று தெளிவாக இருக்கிறார்கள். ரஜினியோ அரசியலுக்கு அழைக்கும் ஊடகங்களை சமாளிப்பதையே பெரிய வேலையாகக் கருதிக் கொண்டிருக்கிறார். ஒரு இயங்கலை ஊடகம், பேட்ட வசனத்தை வைத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று கணிக்க முயல்கிறதாம். அதிலே மக்கள் வாக்களித்திருப்பதுதாம் வேடிக்கை. ரஜினியின் அரசியல் வருகை உறுதி என்று 12.31 விழுக்காடு பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்த வசனமெல்லாம் ஏற்கனவே பல படத்துல பார்த்தாச்சுங்க என்று 15.02 விழுக்காடு பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள். படத்தை ஒட்றத்துக்கான வசனங்க இதெல்லாம் என்று 17.03 விழுக்காட்டு பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள். கேட்டு கேட்டு காது புளிச்சுப் போச்சுங்க கொஞ்சம் ஒங்க கருத்து கணிப்பெல்லாம் நிறுத்துங்க என்று 52.37 விழுக்காட்டு பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அட விட்டுத் தொலைங்கப்பா என்று 3.27விழுக்காட்டு பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்புமணி, சீமான், திருமாவளவன், வைகோ எல்லாம் இந்த ஊடகக்காரங்க எல்லாம் எங்கய்யா போயிட்டாங்க என்று காத்துக்கிட்டிருக்காங்க. கொஞ்சம் இங்கேயும் வெளிச்சம் காட்டுங்க ஊடகக்காரங்களே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,035.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.