Show all

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் மேலும் ஒரு நாய் அகப்பட்டுள்ளது!காதலும் அழகியலும் ஆறறிவு மனிதருக்குரியவை வெற்றுகாமம் ஆறாம் அறிவல்ல

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு நாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இளம்பெண்களை, முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு காதல் வலை விரித்து பலாத்காரம் செய்து, அதை காணொளியாக எடுத்து மிரட்டி வந்த கும்பலை சேர்ந்த நாய்கள் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியன கைது செய்யப்பட்டன. 

ஆனால், இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது என்றும், அரசியல் தொடர்புகள், இதில் அடங்கியுள்ளன என்றும், பொதுமக்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் தானும் இதுபோன்ற மிரட்டலுக்கு உள்ளாக்கியதாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரிடம் புகார் வாங்காமல், காவல்துறையினர் இழுத்தடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தனியார் செய்தி ஒளிபரப்பு ஒன்றுக்கு இது தொடர்பாக ஒரு பேட்டி அளித்து தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக விளக்கினார். அவர் தனது பேட்டியில் குற்றஞ்சாட்டப்பட்ட வாலிபரின் பெயரை தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்த பேட்டி வெளியான பிறகு, காவல்துறையினர் இது தொடர்பாக பாலா என்ற ஒரு நாயை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாயும் திருநாவுக்கரசு உள்ளிட்டவை அடங்கிய கும்பலில் ஒன்று தான் என்று கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரும் நிலையில் கைது நடவடிக்கையும் விரிவடைந்த வகையில் உள்ளது. இதனால் இந்த வழக்கு புதிய பரபரப்பை எட்டியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,091.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.