Show all

தமிழக சிறப்பு புலனாய்வுக் காவல் உதவி எண் அறிவிப்பு! பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம்

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டுவந்த பெண்ணின் அடையாளத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. 

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்விவகரத்தில் காணொளிகள், புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதனை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்படுகிறது. 

காணொளி, பாதிக்கப்பட்டவர்கள் புகாரை தெரிவிக்க கூடாது என மிரட்டும் வகையில் வெளியிடப்படுகிறதா என்ற ஐயமும் எழுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என தமிழக சிறப்பு புலனாய்வு காவல்துறை உதவி எண் அறிவித்துள்ளது.  

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் காணொளிகள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கும், cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேரிட்டவை மற்றும் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,091. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.