Show all

மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு நிர்வாகத்துக்கு உதவிட வேண்டுமென தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஆளுநர் கே.ரோசய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழையால் பலரும் உயிரிழந்துடன், உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மீட்பு நிவாரணப் பணிகளில் அரசு நிர்வாகம் முழுமையான அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்துடன் மீட்புப் பணிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மழை வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தனது வேண்டுகோள் அறிக்கையில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.