Show all

தெலுங்கு நடிகர் பாலி பிரஷாந்த் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பித்து ஓடும் போது, தெலுங்கு நடிகர் பாலி பிரஷாந்த் ஆறாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் பாலி பிரஷாந்த்,

நடிகை சர்மி நடித்து சமீபத்தில் வெளிவந்த  “ஜோதி லட்சுமி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் கதாநாயகனாக நடித்துள்ள  “இப்பட்லோ ராமுதில சீதல எவருன்டாரன்டி பாபு” என்ற திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

ஹைதராபாத்தில் உள்ள மூசாபேட்டையில் வசித்து வரும் பாலி பிரஷாந்துக்கும், பக்கத்து தெருவில் வசிக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. இந்த விவகாரம் அப்பெண்ணின் கணவனுக்கு தெரிய வரவே, கணவன் மனைவிக்;கு இடையே அடிக்கடி சண்டை எழுந்துள்ளது.

சம்பவத்தன்று, அந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்றவுடன் பாலி அங்கு சென்றுள்ளார். இதை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர், அப்பெண்ணின் கணவனுக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறி விட்டார். எனவே, இருவரையும் கையும் களவுமாக பிடிக்க நினைத்த அவர், உறவினர்களில் சிலரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அவர்கள் அந்த வீட்டிற்கு வந்து கதவை தட்டியிருக்கிறார்கள். அதனால் அந்தப் பெண் பாலியை கட்டிலுக்கு  கீழே ஒளித்து வைத்து விட்டு கதவைத் திறந்துள்ளார். உறவினர்கள் உள்ளே சென்று பாலியைத் தேடினார்கள். உடனே, அந்தப்பெண், என்னை வீணாக சந்தேகப்படுகிறீர்கள் என்று கூறி, தனது கையைப் பிளேடால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனால் அவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துக் செல்ல ஓடினார்கள். கதவையும் வெளியே பூட்டி விட்டனர்.

இதனால் அந்த வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்த பாலி, வீட்டின் பின்புறம் இருந்த ஜன்னலை உடைத்து கழிவு நீர் குழாய் வழியாக கீழே இறங்கியுள்ளார். அப்போது கைதவறி ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஹைதராபாத் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.