Show all

வருமான வரித்துறையினர் சசிகலாவிடம் நாளை விசாரணை நடத்தப் போவார்களாம்

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் வருமான வரித்துறை, நாளை விசாரணை நடத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம், வி.கே.சசிகலா மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான 187 இடங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனைக்கு அனுப்பப் பட்டனர். முன்னால் முதல்வர் செயலலிதாவின் போயஸ் தோட்டம் வீட்டில் வருமான வரித்துறையினருக்கு வௌ;ளிக் கிழமை இரவு சோதனைக்கு பணிக்கப் பட்டிருந்தது.

அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினி மற்றும் பென் டிரைவ்களை, தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது.

இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் நாளை விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரின் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளதால், அறங்கூற்றுமன்றத்தின் அனுமதிக்கு பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,613

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.