தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணி
ஏற்படுத்தியுள்ளது என்று வரும் செய்திகள் வதந்தியே என அதன் தலைவர் விஜயகாந்த் கூறினார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இன்று மாலை
நடைபெற்ற விழாவில், ரூ.1.77 கோடி மதிப்பிலான பணிகளை தொடக்கிவைத்து விஜயகாந்த் பேசியதாவது, தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணி
ஏற்படுத்தியுள்ளது என்று வரும் செய்திகள் வதந்தியாகும். கூட்டணி குறித்து பகிரங்கமாகவே
அறிவிக்கப்படும். கூட்டணிக்காக எவ்வித பேரத்திலும் ஈடுபடவில்லை. நான்
பணத்துக்கும் புகழுக்கும் ஆசைப்படவில்லை. அதை இரண்டையும் நான் ஏற்கெனவே சம்பாதித்துவிட்டேன்
என்றார் விஜயகாந்த்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.