Show all

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 44 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 44 தமிழக மீனவர்கள் உட்பட 49 மீனவர்கள் சென்னை திரும்பினர்.

தமிழகம் மற்றும் குஜராத்திலிருந்து அமீரகத்திற்கு மீன்பிடிக்கும் தொழில் செய்வதற்காக 49 மீனவர்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஈரான் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

 

மாநில நடுவண் அரசுகள் மேற்கொண்ட முயற்சியால் 49 மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.