Show all

தமிழகத்தில், பாஜகவின் மாநிலத் தலைவர் பொறுப்பை குறி வைக்கும் எஸ்.வி.சேகர்

08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் பாஜகவில் பொறுப்பு கிடைத்த உடன் தாங்கள் பாஜக தலைமைக்கு சிறந்த அடிமைகளாக இருப்பதாகக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான பகைவன் தளங்களில் ஈடுபடுவார்கள். தமிழிசை, எச்.ராஜா, பொன்.இராமச்சந்திரன், போன்றோர் இதற்கான எடுத்துக் காட்டுகள்.

எஸ்.வி.சேகர் தமிழ் மக்களுக்கு எதிரான பகைவன் தளத்தில், 

இதழியலாளர்கள் குறித்து பண்பாட்டு இழுக்கை பதிவு செய்து, தமிழகத்தையே அல்லோகல்லோலப் படுத்தி விட்டு, 

தமிழகத்தில் தான் பாஜக தலைமைக்கு தகுதியானவன் என்று நிரூபணம் செய்து விட்டு, 

பாஜகவின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தாம் தயாராக உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் பொது வெளியில் பிரகடனப் படுத்தியுள்ளார்.

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் வழிபாடு செய்த எஸ்.வி.சேகரிடம், செய்தியாளர்கள் பாஜகவின் தமிழக மேலிடத்தை ஏற்கவில்லையா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், பொறுப்பை தன்னிடம் கொடுத்தால் தற்போது இருக்கும் வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை உண்டாக்க முடியும் என்றார்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,920.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.