Show all

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்! புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் பேச்சிற்கு

புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசிய பிறகு தான் எங்களுக்கே தெரிகிறது. கண்டிப்பாக சூர்யா பேசியது சரியான கருத்து தான் என்று தெரிவித்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்- புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் பேச்சிற்கு, தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசு கொண்டு வரும் கல்விக்கான புதிய வரைவுக் கொள்கை பற்றி பல கேள்விகளை முன் வைத்து, இதையெல்லாம் நாம் ஏன் பேசுவதில்லை. இதை மாணவர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இல்லையெனில் மொத்தமாக அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் இருண்டு போகும் என சூர்யா நடிகர் சிவக்குமார் மாணவர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் நீட் தேர்விற்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் தனது அதிருப்தி கருத்துக்களை தெரிவித்திருந்தார். 


சூர்யாவின் இந்தப் பேச்சு இணைய தளமெங்கும் விவாதத்தை தொடக்கியது. அனைவரும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து, அவர் அரசுக்கு எதிராக கேட்ட கேள்விகளை இணையம் வழியாக பரப்பி வருகிறார்கள். 

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இயக்குநர் சங்கத் தேர்தலில் வாக்களித்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். 

நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கை குறித்து நல்ல கருத்துகளைத் தான் பேசியுள்ளார். அவருடைய பேச்சை நான் முழுமையாக கேட்டேன். அவருக்கு வாய்ப்பு கிடைத்தது அவர் பேசினார். எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாங்களும் பேசுவோம். 

புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசிய பிறகு தான் எங்களுக்கே தெரிகிறது. கண்டிப்பாக சூர்யா பேசியது சரியான கருத்து தான் என்று கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,220.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.